Welcome

WELCOME to Education++

Sunday, September 7, 2025

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?


IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?

என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்துவிட வேண்டும் என்பது எனது பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் ஆதில் இதுபற்றி தீர்மானமாகவே இருந்தான். ஐஐடி எல்லாம் சேர வேண்டும் என்றால் 10 &12 மதிப்பெண்கள் 75% இருக்கவேண்டும். அதுபோக அங்கு B.tech  சேர JEE exam எழுதி  JoSSA என்ற கல்வி நிறுவனம் நடத்தும் கவுன்சிலிங்கில் தேர்ச்சி பெற வேண்டும் என்றான். 

பத்தாம் வகுப்பு கோவிட் நேரம் என்பதால் ஆல் பாஸ் கேட்டகிரியில் சென்றுவிட்டது. பனிரண்டாம் வகுப்பில் 87% மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றாலும் அவனுக்கு பிடெக் அல்லது மருத்துவம் படிக்கவெல்லாம் விருப்பம் இல்லாதிருந்தது. அவனது ஒரே விருப்பம் வணிகவியல் தான், நம் பேராசிரியர் Ali MA அவர்களிடம் தொலைப்பேசி கவுன்சிலிங் பெற்ற பிறகும் அவன் காமர்ஸ் தான் வேண்டும் என அடம்பிடிக்க ,அருகிலுள்ள புதுக்கல்லூரியில் சேர்த்துவிட்டோம். 

அவனது விருப்பம் என்பதை காட்டிலும் அதில் தனக்கு இருந்த ஆர்வத்தை அவனது துறையில் விடா முயற்சியில் கடந்த  இரண்டாண்டுகளிலும்  முதல் மதிப்பெண்ணுக்கான தங்கப்பதக்கங்கள் பெற்றது அவனது அந்த துறையில் இருக்கும் ஈடுபாட்டினை  எடுத்துரைக்க போதுமாக இருந்தன. 

இப்போதும் என்னிடம் ஐஐடியில் சேர என்ன கல்வித்தகுதி என கேட்போர் இருக்கவே செய்கின்றனர். பணமோ அலைச்சலோ எங்களுக்கு பெரிதல்ல, உலக பிரசித்தம் பெற்ற சென்னை ஐஐடியில் எங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்ற பேரார்வம் உடைய மக்கள் அதுபற்றி கேட்கும் போது நாம் இவற்றை சுட்டிக்காட்டினால் கொஞ்சம் தலைசுற்றித்தான் போகின்றனர்.

12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்துக்கொண்டு ஐஐடியில் அட்மிஷன் போட உங்களுக்கு இவை எல்லாம் தேவை.

B.tech : 12th 75% marks with JEE exam , Jossa counselling

B.sc data science - 10 and 12  , English and Mathematics marks 
with IIT entrance exam

M.tech - UG marks should be 60% with GATE exam + COAP counselling

MBA - UG degree with 60% marks with CAT exam + interview and Reflective writing 
(பிரதிபலிக்கும் எழுத்து என்றால், "ஒரு தனிப்பட்ட அனுபவத்தை விவரித்து, பின்னர் புதிய நுண்ணறிவுகளையும் அறிவையும் பெற பகுப்பாய்வு ரீதியாக கேள்வி கேட்பது, விளக்குவது மற்றும் மதிப்பீடு செய்வது, பெரும்பாலும் அதை அறிவுசார் கோட்பாட்டுடன் இணைத்து எதிர்கால செயல்களைத் தெரிவிப்பது ஆகும்")

M.sc - UG + IIT JAM exam 

PhD - PG degree with GATE exam or 
UGC/CSIR NET JRF scores + 
 Personal Interview.

B.sc -  without JEE - online BSc in Data Science and Applications and online BSc in Electronic Systems programs marks with a entrance exam , 12 mathematics marks is must

மற்றபடி பிராமண குருகுலத்தில் ஐந்து வருடம் படித்து தேறிய ஒரு மாணவர் JEE உள்ளிட்ட இதர தேர்வுகள் எதுவும் எழுதாமலே ஐஐடியில் சேர முடியும் என்ற விபரம் பற்றி எனக்கு விரிவான விளக்கம் தெரியாது. மொத்தத்தில் ஒரு மாணவர் ஐஐடியில் சேர எட்டாம் வகுப்பு முதலாகவே ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் சிறந்து விளங்க வேண்டும் . பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு எட்டாம் வகுப்பு முதலாகவே தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தான் இதன் வாயிலாக இங்கே சொல்ல முனைகிறேன்.

என் மகன்கள் இருவருமே படிப்பில் மிக கெட்டி, அண்ணனை பின்பற்றி தம்பியும் எப்போதும் வகுப்பில் முதல் மதிப்பெண்ணை தக்க வைத்துக்கொண்டே வருவார்கள், ஓரிரு மதிப்பெண்களில் முதல் ரேங்க் என்பதை என்றாவது கோட்டைவிட்டால் அவர்கள் அடையும் சோகமும் அழுகையும் நமக்கு பெண் குழந்தைகளையே ஞாபகப்படுத்தும். பள்ளியில் முதல் மாணவர்கள் என்றாலும் நாம் நினைத்தபடி ஐஐடியில் நுழைந்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது . நுழைவுத்தேர்வுகளுக்கான போதிய ஆற்றலும் முயற்சியும்  நமக்குத் தேவை.

நான் சிறுவயதாக இருந்தபோது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் படிப்பது தான் பெருமை என சொல்லப்பட்டு வந்தோம். அங்க படித்தாலே தனிவிதமான மதிப்பு, மரியாதை அதுபோக அந்த மாதிரி பாரம்பரியமிகு ஒரு கல்லூரியில் படிப்பது என்பது இறைவன் நமக்களிக்கும் அருட்கொடை என்றெல்லாம் எங்களது பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்கு ஆர்வமூட்டுவார்கள். 

ஆனால் நான் B.sc Geology படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை பல்கலையில் இணைந்தபோது அங்கு சந்தித்த ஒரு நற்பேராசிரியர் நெப்போலி அவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ஆம்! அது உண்மைதான், ஆனால் அங்கே Geology, Geography, Climatology இப்படி Fields of Geography படிப்பிற்கு Departments இல்ல , அந்த Programmes எதுக்கும் அங்க வேலையே இல்லை என்றார். நாம் கற்க நினைக்கும் ஒரு பாடம் மாபெரும் கல்விசாலையில் கற்பிக்கப்படுவதில்லை என்பது எத்தனை சோகம்?

B.sc geology பாடத்தில் Climatology assignment எழுதக்கூறிய பேரா.நெப்போலியிடம் குர்ஆனில் இருந்து வசனம் எடுத்து காற்று குறித்த ஒரு விபரத்தை எழுதித் தந்த அந்தக் கட்டுரை Reflective writing என எனக்கு அறிவித்து பாராட்டியவர், உனக்கு அங்கல்லாம் இடமே கிடைக்காது என்று கூறியதை நினைவுபடுத்தி, நமக்குப் பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்துப் படித்தால் மட்டுமே அதில் நாம் Excellency யை காண்பிக்க முடியுமே தவிர படிக்கப் போகும் நிறுவனங்களால் அதனை நம்மிடம் உருவாக்க முடியாது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கல்வி கற்பதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ளுங்கள், என்னென்ன பாடப்பிரிவுகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள், காகிதங்களிலும் டிஜிட்டல் எழுத்துக்களிலும் தியரியாக படிப்பதைக் கடந்து எதுவொன்றையும் பிராக்டிகல் ஆய்வு செய்ய கற்றுக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் சதா ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்கும் ஒன்றினைப் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ளும்படியான படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஐஐடி மட்டுமல்ல உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் உங்களை இருகைநீட்டி வரவேற்றுக்கொள்ளும்.

Sunday, August 31, 2025

அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - மருத்துவ ஊட்டச்சத்தியல் (B.Sc., Clinical Nutrition)


அறிவோம் துணைமருத்துவ பட்ட படிப்புகள்: பி.எஸ்சி. - மருத்துவ ஊட்டச்சத்தியல் 
(B.Sc., Clinical Nutrition)

இந்த பி.எஸ்சி. பட்டபடிப்பு நான்கு வருட படிப்பு. மூன்று வருடங்கள் படிப்பும் ஒரு வருடம் பயிற்சியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியில் அடிப்படை & மேம்பட்ட ஊட்டச்சத்தியல் , அடிப்படை & மேம்பட்ட உணவியல் , உடல் இயங்குவியல், ஊட்டச்சத்து சார்ந்த உயிர் வேதியியல், உணவுத் துறை சார்ந்த நுண்ணியிரியியல், உணவுத்துறை அறிவியல்,  சமூக ஊட்டச்சத்தியல், உணவு சார்ந்த பரிந்துரை வழங்குதல் போன்றவை குறித்து களப்பயிற்சி வழங்கப்படும். 

பல்வேறு இணைநோய் கொண்ட மக்களுக்கு எவ்வாறு உணவு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது குறித்த கல்வி பயிற்றுவிக்கப்படும் 

எதிர்காலம் - மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த ஊட்டச்சத்து மற்றும் உணவியல் பரிந்துரையாளராக பணிபுரியலாம்.  சுயமாகவும் ஊட்டச்சத்து சார்ந்த உணவுமுறை பரிந்துரை செய்யும் நிபுணராக விளங்க முடியும். 

கல்வித் தகுதி

அறிவியல் பாடங்களுடன் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MPCB அல்லது PCBZ அடங்கிய பாடதொகுப்பில் மேல்நிலை (10+2) கல்வி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடத்தொகுப்பில் அல்லது பயோமேத்ஸ் பாடத்தொகுப்பில் ஆங்கிலம் உட்பட பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எங்கு படிப்பது?

தமிழகத்தில் எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலான தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலும் படிக்கலாம். 

கட்டணம்:

அரசு மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு ₹ 3000/- மட்டும்.
 
அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு மூலம் தனியார்/சுயநிதி கல்லூரியில் சேந்தால், ஆண்டுக்கு ₹ 35000/- - 40,000/-.

சுயநிதி கல்லூரியில் தேரடி/மேனேஜ்மென்ட் சீட்டில் சேர்ந்தால், ஆண்டுக்கு 1,00,000/-.

கூடுதல் தகவல்களுக்கு: 

The Tamil Nadu Dr. M.G.R. Medical University
https://www.tnmgrmu.ac.in

Directorate of Medical Education and Research, Selection Committee

https://tnmedicalselection.net

The B.Sc. in Clinical Nutrition, Dietetics & Food Science is a 4-year undergraduate program, including a full-time internship in the final year. This interdisciplinary course blends medical nutrition therapy, public health dietetics, and food science to prepare students for careers in hospitals, wellness clinics, research, and food industries.

Highlights:
*  3 years academic + 1 year clinical internship
*  Practical training in hospitals and food labs
*  UGC/AICTE-approved curriculum
*  Real-world exposure to therapeutic nutrition and diet planning

Program Objectives:
 
1.  Understanding the function and role of nutritionists and dieticians in hospitals, clinics, nursing homes, gyms, corporate sectors, food industries, and other healthcare institutions.
2.  Developing knowledge, abilities, and a comprehensive understanding of the subject to prepare for a career as a teacher at the secondary, college, or university levels after completing advanced studies in a related field.
3.  Planning diets for both healthy and ill members of society to improve health management and disease prevention.
4.  Fostering an entrepreneurial mindset so that one can one day own their own successful business.
5.  Gaining a thorough understanding of the human body.

Thursday, August 28, 2025

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இந்தியாவில் டாப் கல்லூரிகள் இவைதான்!


மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஆசையா? இந்தியாவில் டாப் கல்லூரிகள் இவைதான்!

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இணையாக விரும்பப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்; என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை, வேலை வாய்ப்பு அடிப்படையில் இந்தியாவில் டாப் கல்லூரிகளின் பட்டியல் இங்கே...

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜே.இ.இ மெயின் (JEE Main) போன்ற பொறியியல் நுழைவுத் தேர்வுகளை 1.5 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் எழுதுகிறார்கள். குறிப்பாக ஜே.இ.இ மெயின் மற்றும் ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) போன்ற சிறந்த போட்டித் தேர்வுகளுக்கு கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேர் எழுதுகிறார்கள். இந்த விண்ணப்பதாரர்களிடையே முக்கிய போட்டி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (IIT) சேர்க்கையை மையமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக கணினி அறிவியலின் பிரபலம் அதிகரித்து வரும் போதிலும் பாரம்பரிய விருப்பமானதாகத் தொடரும் இயந்திர பொறியியல் போன்ற விரும்பத்தக்க துறைகளில் சேர மாணவர்கள் விரும்புகின்றனர்.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

மைய பொறியியல், வடிவமைப்பு, எரிசக்தி அமைப்புகள், ரோபாட்டிக்ஸ், வெப்ப அறிவியல் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் அதன் பரந்த நோக்கம் காரணமாக, ஐ.ஐ.டி.,களில் மட்டுமல்ல, சமீபத்திய என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசைகளால் அங்கீகரிக்கப்பட்ட பல மதிப்புமிக்க ஐ.ஐ.டி அல்லாத நிறுவனங்களிலும் இயந்திர பொறியியல் ஒரு விருப்பமான துறையாக உள்ளது.

என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை 2024 இன் படி இயந்திர பொறியியலில் பி.டெக் படிப்புக்கான முதல் 10 ஐ.ஐ.டி அல்லாத நிறுவனங்களின் பட்டியல் இங்கே

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் தமிழ்நாடு

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் மேற்கு வங்கம்

அண்ணா பல்கலைக்கழகம் (CEG) தமிழ்நாடு

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கர்நாடகா, சூரத்கல் கர்நாடகா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா ஒடிசா

பிர்லா தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி ராஜஸ்தான்

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வாரங்கல் தெலுங்கானா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NIT Trichy) 

1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NIT Trichy), மிகவும் பிரபலமான இயந்திர பொறியியல் துறைகளில் ஒன்றாகும், இது அதன் ஆரம்பகால பிரிவுகளில் ஒன்றாகும். இந்தத் துறை இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது, வெப்ப அறிவியல் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் கடுமையான கல்வி மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சியுடன்.

என்.ஐ.டி திருச்சியின் இயந்திர பொறியியல் பட்டதாரிகள், முக்கிய மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருந்து சிறந்த ஆட்சேர்ப்பு செய்பவர்களை தொடர்ந்து ஈர்க்கின்றனர், சமீபத்திய வேலைவாய்ப்பு விகிதங்கள் சுமார் 91% மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான சராசரி சம்பளம் ஆண்டுக்கு சுமார் ரூ.9.5 லட்சமாக உள்ளது.

வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT)

1984 இல் நிறுவப்பட்ட வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், ஒரு இயந்திர பொறியியல் பள்ளியைக் கொண்டுள்ளது. அதன் வலைத்தளத்தின்படி, இந்த நிறுவனம் அதிநவீன ஆய்வகங்கள், தொழில்துறையுடன் ஒத்துழைப்பு மற்றும் பல துறை ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. வி.ஐ.டி நிறுவனத்தின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான இந்தத் துறை, மாணவர்கள் புதுமையான திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் பங்கேற்க உதவுகிறது.

வேலைவாய்ப்பு முடிவுகள் அதன் தொழில் வலையமைப்பைப் பிரதிபலிக்கின்றன, இயந்திர பொறியியல் மாணவர்கள் சராசரியாக ரூ.9.9 லட்சம் தொகுப்புகளைப் பெறுகிறார்கள் மற்றும் அதிகபட்ச தொகுப்பு ஆண்டுக்கு ரூ.88 லட்சத்தைத் தொடும் என்று கூறப்படுகிறது; துறையின் கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தொழில்நுட்ப மற்றும் வாகன ஆட்சேர்ப்பு செய்பவர்களுடன் பணிபுரிகின்றனர்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான இயந்திர பொறியியல் துறைகளில் ஒன்றைக் கொண்டுள்ளது, இதன் தோற்றம் 1906 ஆம் ஆண்டுக்கு முந்தையது. இந்தத் துறை அதன் மதிப்புமிக்க முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சி மற்றும் புதுமை கலாச்சாரம் மற்றும் விரிவான கல்வி சலுகைகளுக்காக நாடு தழுவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பருவத்தில், இந்தத் துறை 100% வேலைவாய்ப்பு விகிதத்தைப் பதிவு செய்தது, சிறந்த உள்நாட்டு தொகுப்புகள் ரூ.57 லட்சம் வரை மற்றும் சராசரியாக ரூ.11 லட்சம் சலுகைகளுடன், முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் வலுவான உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை (CEG)

கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ரீதியாக 1978 இல் நிறுவப்பட்டது, இருப்பினும் அதன் தோற்றம் 1794 இல் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரியில் இருந்து அறியப்படுகிறது.
சமீபத்திய தரவுகளின்படி, வேலைவாய்ப்பு விகிதங்கள் சுமார் 95% ஆக உள்ளன, இயந்திர பட்டதாரிகளுக்கான தொகுப்புகள் ரூ.8 லட்சம் முதல் ரூ.39 லட்சம் வரை, புகழ்பெற்ற இந்திய மற்றும் உலகளாவிய நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

கர்நாடகா தேசிய தொழில்நுட்ப நிறுவனம், சூரத்கல் (NITK)

1960 இல் நிறுவப்பட்ட என்.ஐ.டி சூரத்கலின் இயந்திர பொறியியல் துறை, கல்வி கடுமை மற்றும் தொழில் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் நெருங்கிய ஈடுபாடு மூலம் அதன் நற்பெயரைப் பெற்றுள்ளது.

துறையின் சமீபத்திய வேலைவாய்ப்பு பதிவு அதன் வலிமையைக் காட்டுகிறது: 85% இயந்திர பொறியியல் பட்டதாரிகள் இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் சிலவற்றில் ஆண்டுக்கு ரூ.16 முதல் ரூ.24 லட்சம் வரை சராசரி சம்பளம் பெற்றனர்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கேலா, 1961 இல் நிறுவப்பட்டது, இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை வழங்குகிறது.

அடிப்படை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் துறைகள் இரண்டிலும் துறையின் கவனம், 2024 இல் 98% சிறந்த வேலைவாய்ப்புகளுக்கு பங்களித்துள்ளது, சராசரியாக ஆண்டுக்கு ரூ.16 லட்சம் மற்றும் கோர் பொறியியல் நிறுவனங்களிடமிருந்து ரூ.26 லட்சத்தை எட்டிய முதல் சலுகையும் உள்ளது.

பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி (பிட்ஸ் பிலானி)

பிட்ஸ் பிலானி (BITS PILANI) 1964 இல் நிறுவப்பட்டது, ஆனால் அதன் இயந்திர பொறியியல் திட்டம் 1946 ஆம் ஆண்டுக்கு முந்தையது, இது நாட்டின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்தத் துறை கோட்பாட்டு கடுமையை நடைமுறை தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி வெளிப்பாட்டுடன் இணைப்பதற்கும், 90% க்கும் அதிகமான வேலைவாய்ப்பு விகிதங்களைப் பராமரிப்பதற்கும் பெயர் பெற்றது. இயந்திர பட்டதாரிகள் சமீபத்தில் சராசரியாக ரூ.18 லட்சம் சம்பளம் பெற்றனர், முக்கிய பொறியியல், பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்ந்தனர்.

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வாரங்கல்

வாரங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், 1959 இல் நிறுவப்பட்டது, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதுமை மற்றும் தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட இயந்திர பொறியியல் துறையைக் கொண்டுள்ளது.

2024 வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள்: இயந்திர பட்டதாரிகளில் 83% பேர் பணிகளில் தேர்ச்சி பெற்றனர், சராசரியாக ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகுப்பு ஆண்டுக்கு ரூ.34.1 லட்சம் வரை சென்றது.

ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...


ஆங்கில அறிவை சோதிக்கும் ‘டோபல்’ தேர்வும், அதன் தனித்துவமும்...

(TOEFL - Test of English as a Foreign Language)

ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, ஏறக்குறைய 50 வருடங்களாக ‘டோபல் தேர்வு’ என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது. மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.

ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம்.

டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்கு தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்கள் எவை என்பதை பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வேறு எந்த ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை விடவும், டோபல் தேர்வே, உலகெங்கிலும் அதிகளவில் ஏற்கப்படும் ஒன்றாக திகழ்கிறது. இன்றைய நிலையில், 130-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, 8500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன மற்றும் அவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.

உலகளாவிய அளவில், ஏராளமான கல்வி நிறுவனங்களால், இத்தேர்வு ஏற்கப்படுவதால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள், இத்தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. இதனால், ஒரு மாணவருக்கு நேரமும், உழைப்பும் மிச்சமாகிறது. மொத்தம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில், 4500-க்கும் மேற்பட்ட டோபல் தேர்வு மையங்கள் உள்ளன. அரை நாளில், மாணவர்கள், மதிப்பீட்டை நிறைவு செய்ய முடியும். எனவே, கூடுதலாக, தங்குமிடம் மற்றும் போக்குவரத்திற்கு செலவு செய்ய வேண்டியதில்லை.

சர்வதேச மதிப்பில் 165 டாலர்களும், இந்திய மதிப்பில் ரூ.7,500-ம் செலவாகிறது. இந்திய மாணவர்கள் விரும்பினால், ஆன்லைன் பதிவு அமைப்பின் மூலமாக, பணமாகவே, கட்டணத்தை செலுத்தும் வசதி, தற்போது செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்வு தேதியை மாற்ற விரும்பினாலோ, மறுமதிப்பீட்டிற்கு கோரினாலோ, கூடுதல் மதிப்பெண் பட்டியல் தேவைப்பட்டாலோ, அவைகளுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

என்ன ஸ்பெஷல்?

டோபல் தேர்வை அங்கீகரிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, பிற தேர்வுகளை விட மிகவும் அதிகம். இத்தேர்வு, ஒரு மாணவரின் ஆங்கிலத் திறனை, மிக நுட்பமாக அளவிடுகிறது. வாசித்தல் மற்றும் சுருக்கி எழுதுதல் போன்ற நடைமுறை உலகின் கல்வி சவால்களை இத்தேர்வு பிரதிபலிக்கிறது. மேலும், டோபல் தேர்வானது, சோதிப்பது மற்றும் அதை குறிப்பெடுப்பது போன்ற செயல்பாடுகளினால் தனித்துவம் பெறுகிறது. இதன் மூலம், மதிப்பெண் வழங்கும் செயல்முறையானது, நேர்மையாக நடப்பது, உறுதி செய்யப்படுகிறது.

மதிப்பெண் செயல்முறையானது, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகிறது. இதைத்தவிர, டோபல் மதிப்பாய்வு செயல்பாடானது, ஒவ்வொரு தேர்வருக்கும், பலவிதமான மதிப்பீட்டாளர்களின் மதிப்புரைக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஒரே நபரின் கருத்தின் மூலம் முடிவு செய்வது தவிர்க்கப்படுகிறது. உதாரணமாக, பேசுதல் பகுதியானது, 3 முதல் 6 ஆங்கிலப் புலமையுள்ள நிபுணர்களால் மதிப்பிடப்படுகிறது.

இத்தேர்வில் பின்பற்றப்படும், மனிதர் மற்றும் தானியங்கி மதிப்பெண் முறையால், இதன் மதிப்பிடும் முறை, மிகவும் தரமானதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது. இதன் மூலம், டோபல் தேர்வில் ஒருவர் பெறுகின்ற மதிப்பெண், உண்மையிலேயே, அவரின் திறமைக்கு கிடைத்ததுதான் என்பதை எளிதாக உறுதி செய்யலாம்.

https://www.ets.org

TOEFL 
Test of English as a Foreign Language is a standardised test to measure the English language ability of non-native speakers wishing to enroll in English-speaking universities. The test is accepted by more than 11,000 universities and other institutions in over 190 countries and territories. 

Fee: iBT: US$ 185 and up, depending on the country.

Year started: 1964; 58 years ago

Prerequisites / eligibility criteria: No official prerequisite. Intended for non-native English speakers

Countries / regions: 4,500 test centers in over 190 countries and territories.

Score / grade validity: 2 years

Scores / grades used by: More than 11,000 colleges, agencies and other institutions in over 150 countries.

Annual number of test takers: 2.3 million

(இது ஒரு மீள் பதிவு)

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!


ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!

ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம்.

ஐ.ஐ.டி (IIT - Indian Institute of Technogy): 

மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. ஜே.இ.இ. மெயின் தேர்வினை எழுதி, அதில் அதிக கட்- ஆப் மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால்தான், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் நுழைய முடியும்.

பாடப்பிரிவுகள்:

பி.டெக்., இளநிலையில் ஏரோஸ்பேஸ், விவசாயம், செராமிக், எனர்ஜி, தாது வளங்கள், நேவல் ஆர்கிடெக்‌ஷர், ஓஷன் என்ஜினீ யரிங், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், பயோ மெடிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமெண்டேஷன், இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெட்டலார்ஜிக்கல், மெக்கானிக்கல், மைனிங், புரொடெக்‌ஷன் அண்ட் இண்டஸ்டிரியல், டெக்ஸ்டைல், இயற்பியல் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஐ.ஐ.டி.,க்கள் எங்கெங்கு உள்ளன?: 

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., தமிழகத்தில் சென்னையில் உள்ளது. தவிர, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்க்கி, வாரணாசி, தன்பாத் ஆகிய இடங்களிலும் உள்ளன.

வேலைவாய்ப்பு: 

ஐ.ஐ.டி.,க்களில் பி.டெக்., தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். பெரும்பாலும், ஐ.ஐ.டி.க்களில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும்போதே வளாக தேர்வு மூலம் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் அவர்களை அழைத்து போய்விடுவதுண்டு.

இணையதளம்:

ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வுகள் பற்றிய கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in மற்றும் www.jeeadv.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து அறியலாம்.

என்.ஐ.டி.

ஐ.ஐ.டி., போல என்.ஐ.டி. என்பதும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனம்தான். இங்கும் ஐ.ஐ.டி.போல பலவிதமான பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. என்.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கவும், ஜே.இ.இ. தேர்வு அவசியமாகிறது.

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில், துவாகுடியில் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரி, குருஷேத்ரா, கொல்கத்தா, டெல்லி, அகர்தலா, துர்காபூர், கோவா, போபால், ஜெய்ப்பூர், அலகாபாத், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், நாக்பூர், பாட்னா, ராஜ்பூர், ரூர்கேலா, சிக்கிம், சில்சார், ஸ்ரீநகர், சூரத், சூரத்கல், உத்தரகாண்ட், வாரங்கல், அருணாச்சல பிரதேசம், ஹமீர்பூர் ஆகிய இடங்களில் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி.யில் படித்தால் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குமோ அதே வரவேற்பு என்.ஐ.டி.யில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளித்து வேலைக்குத் தேர்வு செய்கின்றன. சுயதொழிலும் தொடங்கலாம். மேலும், எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., போன்ற முதுநிலை தொழில்படிப்புகளையும் தொடரலாம்.

(இது ஒரு மீள் பதிவு)

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா?

IIT madras உள்நுழைவது அத்தனை கடினமா? என் மகன் ஆதில் முஹம்மத் முதலாம் ஆண்டு கல்லூரி சேருவதற்கு முன் அவனை சென்னை ஐஐடியில் சேர்த்து...